நகை, பணம் பறித்த அண்ணன்- தம்பி கைது


நகை, பணம் பறித்த அண்ணன்- தம்பி கைது
x

காரில் லிப்ட் கேட்பது போல் தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறித்த சகோதரர்களை பேரை போலீசார் கைது செயதுள்ளனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

காரில் லிப்ட் கேட்பது போல் தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறித்த சகோதரர்களை பேரை போலீசார் கைது செயதுள்ளனர்.

லிப்ட் கொடுத்தவரிடம் நகை பறிப்பு

நாகர்கோவில் பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் கோஷி(வயது 57), தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இவர் பூதப்பாண்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடசேரி பகுதியில் வைத்து கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ஆசிப் என்பவர் சாலையோரம் நின்று கொண்டு காரில் லிபிட் கேட்டார்.

உடனே சந்தோஷ் கோஷியும் காரை நிறுத்தி ஆசிப்பை காரில் ஏற்றினார். காரில் இருந்தபடி ஆசிப் அவரது நண்பா்களை தொடர்பு கொண்டு பேசினார். இறச்சகுளம் பகுதியில் கார் வந்ததும் ஆசிப் இறங்கினார்.

அப்போது ஆசிப்பின் நண்பர்கள் கிருஷ்ணன்கோவில் மாகின் மற்றும் சமீர்(25), அவரது தம்பி நசீர்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோஷ் கோஷியின் கழுத்தில் கடந்த 2¼ பவுன் நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்தனர்.

அண்ணன்- தம்பி கைது

மேலும் சந்தோஷ் கோஷியின் செல்போனில் உள்ள கூகுள்-பே மூலம் ரூ.73 ஆயிரத்தையும் அபேஸ் செய்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றி அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த 4 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சகோதரர்களான சமீர், நசீர் ஆகியோர் வடசேரி பகுதியில் நிற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனே போலீஸ் இன்ஸ்ெபக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் கிருஷண்ன்கோவில் பகுதியில் வைத்து சமீர், நசீர் ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். கைதான அண்ணன், தம்பியிடம் இருந்து நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.


Next Story