வீடுகளின் பூட்டை உடைத்து 13½ பவுன் நகைகள் திருட்டு


வீடுகளின் பூட்டை உடைத்து 13½ பவுன் நகைகள் திருட்டு
x

விராலிமலை, திருமயத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து 13½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

நகை திருட்டு

விராலிமலை பெரியார்நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் ஜோஸ்விக்டர் (வயது 39). இவர், அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜோஸ்விக்டர் தனது குடும்பத்தினருடன் கடந்த 16-ந்தேதி வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ேள சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ேள ஒரு அறையில் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது ெதரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து விராலிமலை போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி மற்றும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

10 பவுன் நகை

திருமயம் அருகே நமண சமுத்திரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவர் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.


Next Story