வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் புதுமார்க்கெட் 3-வது தெருவை சேர்ந்தவர் குரு (வயது 39). இவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குரு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story