வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடு போனது.

விழுப்புரம்

வளவனூர்,

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் பனங்குப்பத்தை சேர்ந்தவர் மொயின்காப் மனைவி அபிபா (வயது 28). நேற்று முன்தினம் மதியம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் நகை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள், பட்டப்பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரமாகும். இதுகுறித்து அபிபா, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story