காலை உணவு திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் பாராட்டு


காலை உணவு திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் பாராட்டு
x

பா.ம.க.வின் யோசனை நடைமுறைப்படுத்தப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தமிழகத்தில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்; காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் யோசனை வரும் 25-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுக்கு பாராட்டுகள்.

காலை உணவில் முதல்கட்டமாக வாரத்திற்கு இரு நாட்களாவது சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும்; பின்னர் படிப்படியாக எல்லா நாட்களுக்கும் நீட்டிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.


Next Story