குடிநீர் குழாயில் உடைப்பு


குடிநீர் குழாயில் உடைப்பு
x

குன்னூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது

நீலகிரி

ஊட்டி,

குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உபாசி அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் 6 அடி உயரம் வரை பீய்ச்சி அடித்து வீணாக வெளியேறியது. மேலும் பீய்ச்சி அடித்த தண்ணீர் பஸ்களில் வந்த பயணிகள் மீது பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து வாகனங்கள் ஒதுங்கி நின்றது. இதன் காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் எமரால்டு அணையில் இருந்து குன்னூருக்கு குடிநீர்வரும் குழாய் என்பதால், தண்ணீரை நிறுத்துவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டது.


Next Story