வீட்டின் கதவை உடைத்து திருட்டு


வீட்டின் கதவை உடைத்து திருட்டு
x

வீட்டின் கதவை உடைத்து திருட்டு போனது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டி பழைய தபால்நிலையம் வீதியை சேர்ந்தவர் முருகராஜ். இவர், வெளியூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முருகராஜூக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இதுகுறித்து திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வெளியூரிலிருந்து முருகராஜ் வந்த பின்னர் தான் வீட்டில் இருந்து திருட்டு போன பொருட்கள் குறித்து விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story