பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு


பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு
x

பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி. இப்பகுதியில் இருந்து புதூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் குடிநீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாய் சேதம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளிேயறுகிறது. மேலும் குடிநீர் குழாயில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. சேதமான குழாயை சீரமைப்பது மட்டுமல்லாமல் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது கோடைகாலமாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. ஆகையால் குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிையச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story