ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையின் உடல் மீட்பு


ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையின் உடல் மீட்பு
x

ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையின் உடல் மீட்பு

தஞ்சாவூர்

திருவிடைமருதூரில் ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

2 வயது குழந்தை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் பிரிடிக்ஸ் சாம்சன்(வயது 22).

நேற்று முன்தினம் இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஸ்டாலின் என்பவரது 2 வயது குழந்தை ரோஜரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு திருவிடைமருதூர் கீழத்தூண்டில் விநாயகன்பேட்டை வீரசோழன் ஆற்று கட்டுக்கரையில் சென்று கொண்டிருந்தார்.

தேடும் பணி

அப்போது நிலை தடுமாறி அவர் மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் விழுந்தார். ஆற்றில் விழுந்த பிரிடிக்ஸ் சாம்சன் தண்ணீரில் நீந்தி கரைக்கு திரும்பினார்.

பின்னர் அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையை திருவிடைமருதூர் போலீசார் மற்றும் திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள் ேதடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் நேற்று முன்தினம் இரவு தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. காலை 6 மணி முதல் திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் மாறன் தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து 2 வயது குழந்தையின் உடலை தேடி வந்தனர்.

உடல் மீட்பு

4 மணி நேர தேடுதலுக்கு பிறகு கல்யாணபுரம் அருகே குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலை பார்த்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story