ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்


ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
x

ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடந்தது.

கரூர்

கரூர்-வெள்ளியணை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story