கிணற்றில் வாலிபர் பிணம்


கிணற்றில் வாலிபர் பிணம்
x

கிணற்றில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கொம்மந்தபுரம் பகுதியை சேர்ந்த குத்தாலக்கனி மகன் மணிக்குமார் (வயது 24). இவர் துணிக்கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். தளவாய்புரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக உறவினர் தொந்தியப்பன் குத்தாலக்கனிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீசார், ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் ஆகிேயார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து மணிக்குமாரின் உடலை மீட்டனர். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story