தூக்கில் வாலிபர் பிணம்


தூக்கில் வாலிபர் பிணம்
x

விருத்தசாலம் அருகே தூக்கில் வாலிபர் பிணமாக கிடந்தாா். இதுதொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கிராமத்தில் உள்ள வீரனார் கோவில் அருகே இருந்த மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கம்மாபுரம் அருகே உள்ள சாத்தப்பாடி, தெற்கு தெருவை சேர்ந்த சன்னியாசி மகன் சத்யமூர்த்தி (வயது 35) என்பதும் திருமணமாகாதவர் என்பதும் தெரியவந்தது. மேலும் எம்.ஏ., பி.எட். படித்துள்ள இவர் வேலை கிடைக்காததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பாிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சத்யமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story