நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்


நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோ, ராணிப்பேட்டை நகர செயலாளர் செல்வம், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story