பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்


பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
x

பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கவர்னர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும்.

ஆனால் அவர்கள் அதை செய்கிறார்களா? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கவர்னர்களை யார் செயல்படுத்துகிறார்கள்? என்பது பொதுமக்களுக்கு தெரியும்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த பா.ஜ.க. கட்சியினர், பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியானவர்கள் அல்ல.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம் போல காட்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story