கோவில் விழாவில் இருதரப்பினர் மோதல்


கோவில் விழாவில் இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 4 March 2023 7:30 PM GMT (Updated: 4 March 2023 7:30 PM GMT)
சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 37). இவரின் உறவினர்கள் தன்ராஜ், ஜெயந்தி. இவர்களுக்கும், ராதாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காளியம்மன் கோவில் விழாவையொட்டி நடந்்த கிரிக்கெட் போட்டியின் போது ராதா தரப்புக்கும், தன்ராஜ், ஜெயந்தி தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் தனித்தனியாக அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் தன்ராஜ், ஜெயந்தி, ராதா, நவீன், விக்னேஷ், கோகுல், இன்னொரு கோகுல் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story