இருதரப்பினர் மோதல்; 14 பேர் படுகாயம்


இருதரப்பினர் மோதல்; 14 பேர் படுகாயம்
x

இலுப்பூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

மோதல்

இலுப்பூர் அருகே உள்ள புங்கினிபட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஸ் (வயது 23). இவருக்கும், பூமருதவயல் பகுதியை சேர்ந்த விஜயன் (57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு புங்கினிப்பட்டி திரவுபதியம்மன் கோவில் அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

14 பேர் படுகாயம்

இதில் ராஜேஸ், அஜீத் (23), கண்ணதாசன் (34), தங்கவேல் (33), கருப்பையா, இளவரசன், பாலு உள்ளிட்டோருக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த விஜயன், சுபாஸ்சந்திரபோஸ் (33), மாரிமுத்து (28), பொன்னுச்சாமி (22), மணிகண்டன் (19), முருகேசன் (49), பாலாஜி (32) ஆகிய 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் இலுப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story