மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி


மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
x

மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.

திருச்சி

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி திருச்சியில் நேற்று நடந்தது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூர போட்டியும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 245 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை மேயர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக முறையே தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story