சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு


சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு
x

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பைரவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பைரவருக்கு ஷோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story