உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை கிடுகிடு உயர்வு


உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை கிடுகிடு உயர்வு
x

உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, திருக்காடுதுறை, பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.9ஆயிரத்துக்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2,500-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்துக்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.ஆயிரத்துக்கும் விற்பனையானது. உற்பத்தி குறைந்துள்ளதால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story