ஓ.பன்னீர் செல்வம் நடத்தியது பினாமி மாநாடு:எடப்பாடி பழனிசாமியை திட்டுவதற்காக ரூ.25 கோடி செலவு செய்துள்ளனர்- ஆர்.பி.உதயகுமார் பேச்சு


ஓ.பன்னீர் செல்வம் நடத்தியது பினாமி மாநாடு:எடப்பாடி பழனிசாமியை திட்டுவதற்காக ரூ.25 கோடி செலவு செய்துள்ளனர்- ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x

திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் நடத்தியது பினாமி மாநாடு. எடப்பாடி பழனிசாமியை திட்டுவதற்காக, இந்த மாநாட்டில் ரூ.25 கோடி செலவு செய்து உள்ளனர்.

மதுரை


திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் நடத்தியது பினாமி மாநாடு. எடப்பாடி பழனிசாமியை திட்டுவதற்காக, இந்த மாநாட்டில் ரூ.25 கோடி செலவு செய்து உள்ளனர்.

தீய சக்தி

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அதில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றவர்கள் சுயநலத்துடன் நமது இந்த இயக்கத்தை அடமானம் வைக்க துடிக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி, பொது செயலாளர் ஆனது செல்லும் என அறிவித்து விட்டது. அதன்பிறகும் அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி இருக்கிறார். அவர் திருச்சியில் எதற்காக மாநாட்டை நடத்தினார்?. எதற்காக இந்த மாநாடு? அ.தி.மு.க.வின் எந்த தொண்டனும் தி.மு.க. என்பது தீய சக்தி என்றுதான் கூறுவார்கள். தி.மு.க.வின் அவலங்களை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கு தோலுரித்தி காட்டினார்கள்.

பினாமி மாநாடு

தற்போது கூட தி.மு.க.வின் மக்கள் விரோத போக்கினை எடப்பாடி பழனிசாமி தோலுரித்து காட்டி வருகிறார். சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையில் மூன்று மணி நேரம் உரையாடி, தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். தி.மு.க.வை தோலுரித்து காட்டுவதுதான், அ.தி.மு.க.வின் இலக்கணமாகும். ஆனால் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு, தி.மு.க.வை விமர்சிக்காமல் மாநாட்டை சிலர் நடத்தி இருக்கிறார்கள். தி.மு.க.வின் கைக்கூலியாக மாறிவிட்டனர். தி.மு.க.வின் பிரதிநிதி போல வந்து மாநாட்டில் பலர் கலந்து கொண்டார்கள். தி.மு.க.வின் பினாமி மாநாடு போல் திருச்சியில் பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடைபெற்று உள்ளது.

ரூ.31 ஆயிரம் கோடி...

ஓ.பன்னீர் செல்வம் ரூ.25 கோடி செலவு செய்து எடப்பாடி பழனிசாமியை திட்டுவதற்காக ஒரு மாநாடு நடத்தி இருக்கிறார். யார் தூண்டுதலால் இந்த மாநாடு நடந்து இருக்கிறது என்று மக்கள் புரிந்து கொண்டனர். மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி நடைபெறும் மாநாட்டினை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

தி.மு.க. கடந்து 2 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. ஆனால் தற்போது ரூ.31 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்து சம்பாதித்து விட்டனர். இதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை என்று நிதி அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். இதற்கு உண்மையான விசாரணையை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story