முன்விரோதம் காரணமாகவிவசாயி மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு
வருசநாடு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி மோட்டார்சைக்கிளுக்கு முதியவர் தீ வைத்துள்ளார்.
தேனி
வருசநாடு அருகே உள்ள மேலபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தவர் மாயன் (வயது 70). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் குணசேகரன் தனது மோட்டார்சைக்கிளை சின்னசாந்திபுரம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் நிறுத்திவிட்டு மாடு மேய்க்க சென்றார். அப்போது அங்கு வந்த மாயன் முன்விரோதம் காரணமாக வீட்டில் இருந்த குணசேகரனின் மனைவியை திட்டினார். மேலும் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்து சென்றார். இதில் மோட்டார்சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து வருசநாடு போலீசில் குணசேகரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story