5 நாட்கள் மீன்பிடிக்க தடை


5 நாட்கள் மீன்பிடிக்க தடை
x

5 நாட்கள் மீன்பிடிக்க தடை

ராமநாதபுரம்

ராமேசுவரம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையமுன்னிட்டு இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 4-ம் தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகை இன்றும், நாளையும் சுங்கத்துறை மற்றும் மீன் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து சோதனையும் நடத்த உள்ளனர். அதுபோல் வருகிற 3,4-ந் தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவும் மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story