பால்குடம்-காவடி ஊர்வலம்
பால்குடம்-காவடி ஊர்வலம்
தஞ்சாவூர்
பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டை அம்பலகாரதெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள ஒம் சக்திஅம்மன், பாலமுருகனுக்கு பால்குடம், கரகம் எடுக்கும் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி சோலைபூஞ்சேரி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் பக்தர்கள் பால்குடம், கரகம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அம்பலகாரத்தெரு கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story