வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் பாண்டியன் நகரில் கடந்த 2011-ம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. தற்போது அவர் ஊட்டியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பகவதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story