விழிப்புணர்வு கருத்தரங்கு


விழிப்புணர்வு கருத்தரங்கு
x

விழிப்புணர்வு கருத்தரங்கு

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவுசார் காப்புரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அறிவுசார் காப்புரிமை குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் சார்பில் அறிவுசார் காப்புரிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி முதல்வர் பெரியசாமி தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. மின்னியல், மின்னணுவியல் துறை தலைவர், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் செல்வப்பெருமாள் வரவேற்றார். நிகழ்ச்சியை கல்லூரியின் தாளாளர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். தேசிய அறிவுசார் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு அலுவலக ஆய்வாளர் ஹரீஸ் பிரசாத், அறிவுசார் காப்புரிமை தாக்கல் மற்றும் அதனை பெறுவதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார்.


Next Story