அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:46 PM GMT)

பால்ராம்பட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே பால்ராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சி மூலம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜெய்சங்கர், சூரியா, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் விஜி மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இடைநிலை ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்.


Next Story