வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்

தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வுகாண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், மகளிர் திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழுவினா் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story