விழிப்புணர்வு ஊர்வலம்
விழிப்புணர்வு ஊர்வலம்
ராமநாதபுரம்
திருப்புல்லாணி யூனியனில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் பேரணியை தொடங்கி வைத்தார். திருப்புல்லாணி அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்று பேசினார். பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருகிணைப்பாளர் சித்ராதேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story