15 கலைஞர்களுக்கு விருது


15 கலைஞர்களுக்கு விருது
x

15 கலைஞர்களுக்கு விருது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி கலெக்டர், மனு மீதான நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தினார். பின்னர் கலை பண்புகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைப்பண்புகளை சிறப்பிக்கும் வாயிலாக 2021-22-ம் ஆண்டிற்கு 15 கலைஞர்களுக்கு கலைஇளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலைநன்மணி, கலைமுதுமணி ஆகிய விருதுகளையும், ரூ.4 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான காசோலைகளையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story