தன்னார்வலர்கள் 60 பேருக்கு விருது


தன்னார்வலர்கள் 60 பேருக்கு விருது
x

தன்னார்வலர்கள் 60 பேருக்கு விருது தனுஷ்குமார் எம்.பி. வழங்கினார்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக்கல்வித்திட்டம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி ஊக்குவிக்கும் வகையில் ஆர்வத்துடன் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, சிறந்த தன்னார்வலருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஊரணிபட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட்டேபிள் அமைப்பு மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் காளிராஜ் முன்னிலை வகித்தார். இல்லம் தேடிக் கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார். தன்னார்வலர்கள் 60 பேருக்கு ராஜபாளையம்-சிவகாசி ரவுண்ட் டேபிள் சார்பில் வழங்கப்பட்ட விருது மற்றும் சான்றிதழை தனுஷ்குமார் எம்.பி. வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, ஸ்ரீவி்ல்லிபுத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, ஆசிரியப் பயிற்றுனர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தன்னார்வலர்கள் சார்பில் ராமலட்சுமி, சிவகாமி, பவளப்பிரியா, ஈஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மீனாட்சிபுரம் தன்னார்வலர் சுகிர்தா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story