கல்வி, விளையாட்டு துறையில் சிறந்தவர்களுக்கு விருது


கல்வி, விளையாட்டு துறையில் சிறந்தவர்களுக்கு விருது
x

காமராஜர் பிறந்த நாளையொட்டி நடந்த கல்வித்திருவிழாவில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி, விளையாட்டு துறையில் சிறந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விருதுநகர்

காமராஜர் பிறந்த நாளையொட்டி நடந்த கல்வித்திருவிழாவில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி, விளையாட்டு துறையில் சிறந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கல்வித்திருவிழா

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வித்திருவிழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி காமராஜர் நினைவு இல்லத்தில் கார்த்திகா கரிக்கோல்ராஜ் உள்ளிட்டோர் திருவிளக்கு ஏற்றி வைத்தனர்.

பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்தை சிவகாசிமேயர் சங்கீதாஇன்பம் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கல்வித்தந்தை விருது

கல்வியில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு கல்வித்தாய் மற்றும் கல்வித்தந்தை விருதுகளும், விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.

காமராஜர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விழா மேடையில் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வரவேற்றார். முடிவில் பொருளாளர் நல்லதம்பி நன்றி கூறினார். விழாவில் சீனிவாசன் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story