ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் டிஜிட்டல் மீட்டர் கொண்டு இயக்கப்படும் மீட்டர் ஆட்டோவை தடை செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ராஜா முகமது தலைமை தாங்கினார்.

 ஆர்ப்பாட்டத்தில் வாட்ஸ்அப் செயலி மற்றும் டெலகிராம் மூலம் இயங்கும் மீட்டர் ஆட்டோவை தடை செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

 பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்


Next Story