விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:46 PM GMT)

தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய தந்தை, மகன்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்(வயது 25). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த இவரது தம்பி மனைவி மணிமொழியை அதே பகுதியை சேர்ந்த பழனி மற்றும் அவரது மகன்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோர் அசிங்கமாக திட்டினர். இதை தட்டிக் கேட்ட மணிகண்டனை பழனியும், அவரது மகன்களும் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பழனி உள்பட 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story