பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

பதக்கம்-சான்றிதழ்

இந்த போட்டிகளில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story