சென்னை விமான நிலையத்தில் ரூ. 8 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ. 8 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது
x

சென்னை விமான நிலையத்தில் ரூ. 8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

விமானத்தில் வந்த உகண்டா நாட்டை சேர்ந்த நம்பீரா நோலின் (வயது 28) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது பையில் விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் 1 கிலோ 756 கிராம் மெத்தகுலோன், 1 கிலோ 431 கிராம் ஹெராயின் இருந்தது. ரூ. 8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் கோக்கைன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தி உகண்டா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார், இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story