பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்   ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்
x

ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்

ஈரோடு

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு தருமபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், பெருந்துறை, அந்தியூர், அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 11 ஆயிரத்து 482 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 679-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 822-க்கும் என மொத்தம் ரூ.3 கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 699-க்கு ஏலம் போனது. கோவை, அன்னூர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், தருமபுரி, கொங்கணாபுரம், பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story