பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி விற்பனை


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  ரூ.3¼ கோடிக்கு பருத்தி விற்பனை
x

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி விற்பனையானது.

ஈரோடு

அம்மாபேட்டை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி விற்பனையானது.

பருத்தி ஏலம்

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு கர்நாடக மாநிலம் மைசூரு, ஊக்கியம் மற்றும் தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 348 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

ரூ.3¼ கோடிக்கு...

இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 11 ஆயிரத்து 732 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 12 ஆயிரத்து 308 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 3 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையானது. ஆந்திர மாநில வியாபாரிகள் மற்றும் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர், கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் பகுதி வியாபாரிகள் போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றார்கள். 6-வது வாரமாக பருத்தி மூட்டைகள் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.


Related Tags :
Next Story