பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 23). இவரும், புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவரான அஷ்ரப்அலி (23) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ராஜலட்சுமிக்கு அவரது பெற்றோர், வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதையறிந்த ராஜலட்சுமி, இதுபற்றி அஷ்ரப்அலியிடம் தகவல் தெரிவித்து விட்டு இருவரும் கடந்த 17-ந் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி வில்லியனூர் விநாயகர் கோவிலில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து வந்தனர். இதையறிந்த ராஜலட்சுமியின் உறவினர்கள், அஷ்ரப்அலியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜலட்சுமியும், அஷ்ரப்அலியும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு கொடுத்தனர்.


Next Story