பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; எம்.எல்.ஏ. வழங்கினார்


பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; எம்.எல்.ஏ. வழங்கினார்
x

சுரண்டையில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தென்காசி

சுரண்டை:

நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி சுரண்டை கிளையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது. வங்கி மேலாளர் சங்கரவேலு தலைமை தாங்கினார். எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்கி தொடங்கி வைத்தனர். விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், அந்தோணி சுதா ஜேம்ஸ், ஆறுமுகசாமி பாண்டியன், நகர தி.மு.க. துணை செயலாளர் பூல் பாண்டியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story