காரில் வந்து ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த வாலிபர் கைது


காரில் வந்து ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
x

காரில் வந்து ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி:

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந்தேதி இரவு இவர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் சர்வீஸ்சாலையில் ரூ.1 லட்சத்துடன் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் இசக்கிராஜா (27) என்ற வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர்.


Next Story