தர்மபுரியில்தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது


தர்மபுரியில்தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 29 April 2023 7:00 PM GMT (Updated: 29 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி செட்டிக்கரை ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 36). தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் சோளக்கதிர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஒருவர் சோளக்கதிர் வாங்குவது போல் தள்ளுவண்டி அருகே நின்றார்.

அப்போது அந்த நபர் திடீரென சிவாவின் கையில் இருந்த ரூ.500-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் பணத்தை பறித்து கொண்டு ஓடிய நபரை துரத்தி பிடித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் அரூரை சேர்ந்த தையல் தொழிலாளியான திருப்பதி (42) என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story