பள்ளிபாளையத்தில் டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது


பள்ளிபாளையத்தில்  டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது
x

பள்ளிபாளையத்தில் டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 24). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு பாளையத்தை சேர்ந்த பாம்பு என்கிற பகத்சிங் (26), அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (21), சிவா (20) ஆகிய 3 பேர் பிரவீன்குமார் மீது இடிப்பது போல் நடந்து சென்றனர். இதை பிரவீன்குமார் தட்டி கேட்டார். இதனால் ஜீவானந்தம், சிவா சேர்ந்து பிரவீன்குமாரை கைகளால் தாக்கினர்.

அப்போது பகத்சிங் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மிரட்டி பிரவீன்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரம்-ஐ பறித்து கொண்டதுடன் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து பிரவீன்குமார் நேற்று காலை பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடினார். இதையடுத்து நேற்று மதியம் புதன்சந்தை அருகில் வாலிபர்கள் 3 ேபரும் நிற்பது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் கைது ெசய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பகத்சிங் மீது கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story