வேன் மோதி ராணுவ வீரர் பலி - இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்


வேன் மோதி ராணுவ வீரர் பலி - இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்
x

இருசக்கர வாகனத்தில் சென்றபோது வேன் மோதி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

திருமங்கலம்

இருசக்கர வாகனத்தில் சென்றபோது வேன் மோதி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

வேன் மோதி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 42). இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தர்மலிங்கம் டேராடூன் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 17-ந் தேதி விடுமுறைக்காக வந்தார். இவரது தாயார், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணையில் உள்ளார். அவரைப் பார்ப்பதற்காக திருமங்கலத்தில் இருந்து கல்லணைக்கு இருசக்கர வாகனத்தில் தன்னுடைய மகன் சஞ்சயுடன் சென்றார்.

விடத்தக்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்து தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகன் சஞ்சய் லேசான காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மனைவி ஜோதி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story