தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சென்னை,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கடிதம் எழுதி உள்ளார்.


Next Story