மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

முதல்-அமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


முதல்-அமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இளைஞர் விருது

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 15 வயது முதல் 35 வரையிலான ஆண், பெண் ஆகியோர் இ்ந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த 2022 ஏப்ரல் 1-ந் தேதியன்று 15-வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது கடந்த மார்ச் 31-ந் தேதி அன்று 35 வயதுக்குள்ளவராக இருக்க வேண்டும்.

பரிசீலனை

கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடத்திற்கு தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியவையாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் சமுதாய மக்களிடமும் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

கடைசி நாள்

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந் தேதியன்று மாலை 4 மணி ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்ட போலீசில் இருந்து நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story