தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்


தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்
x

தமிழ்செம்மல் விருதுபெற விரும்புபவர்கள் 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை


தமிழ்செம்மல் விருதுபெற விரும்புபவர்கள் 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

விருது

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவருடைய தமிழ் தொண்டினை பெருமைப் படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. "தமிழ்ச்செம்மல்" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.25,000 பரிசுத்தொகையும் தகுதி உரையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் 2022-ம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு உரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தன்விவரக் குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டு இருப்பின் அவை பற்றிய விவரங்கள் பட்டியலோடு தமிழ் சங்கங்கள் அல்லது தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்கு தகுதியாக குறிப்பிடத்தக்க பணிகள் தமிழறிஞர்கள் 2 பேரின் பரிந்துரை கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம் இணைக்க வேண்டும்.

சான்று

2 கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்கள், தமிழ்ப் பணிகளுக்கான சான்றுகளையும் இணைத்து சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனரையோ நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Next Story