மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி?


மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி?
x

அரசு பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்


அரசு பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுமை பெண் திட்டம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் படிக்கும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்து உள்ளனர். ​தற்போது இந்த வலைத்தளத்தில் www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப் பிக்கலாம். மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந்் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

சிறப்பு முகாம்

​இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி படிக்கும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந்் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story