போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஜெயங்கொண்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாடல் கல்லூரி தாளாளர் பழனிவேல், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story