கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலந்துகொண்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்தையன், சுதா, மாவட்ட சமூக நல அலுவலர் சில்வியா வினோதினி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story