சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு


சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கடந்த 9-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story